மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது .
அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால், பெரும்பாலான மக்களுக்கு மாடவீதியில் ஊர்வலம் நடக்கும் என்று தெரியவில்லை. கடந்த ஒன்பது மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் முடிந்த பிறகு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமிக்கு கோவிலின் மண்டபத்தில் இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது.
ஞாயிற்றுகிழமை காலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாடவீதியில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புகைப்படம்: எஸ்.பிரபு, மற்றும் மதன்
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…