மயிலாப்பூர் மாடவீதிகளில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி ஊர்வலம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது .

அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால், பெரும்பாலான மக்களுக்கு மாடவீதியில் ஊர்வலம் நடக்கும் என்று தெரியவில்லை. கடந்த ஒன்பது மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் முடிந்த பிறகு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமிக்கு கோவிலின் மண்டபத்தில் இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது.

ஞாயிற்றுகிழமை காலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாடவீதியில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புகைப்படம்: எஸ்.பிரபு, மற்றும் மதன்

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago