மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது .
அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால், பெரும்பாலான மக்களுக்கு மாடவீதியில் ஊர்வலம் நடக்கும் என்று தெரியவில்லை. கடந்த ஒன்பது மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் முடிந்த பிறகு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமிக்கு கோவிலின் மண்டபத்தில் இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது.
ஞாயிற்றுகிழமை காலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாடவீதியில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புகைப்படம்: எஸ்.பிரபு, மற்றும் மதன்
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…