கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து கைப்பற்றியது.
மேலும் கடந்த சில மாதங்களாக கோவில் அலுவலக கதவு பூட்டியே கிடக்கிறது.
கோவில் அறங்காவலர் தலைவர் என்.சி.ஸ்ரீதர், கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவிலுக்காக தனது பணியை முழு நேரமாக செலவிட்டதாகவும், எனவே இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மயிலாப்பூர் டைம்ஸிடம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது அவர் கோவிலில் ஏற்கனெவே வகித்த பதவியை மீண்டும் கையில் எடுத்து வழக்கமான நடைமுறையை செய்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த தெப்பத் திருவிழாவை ஏற்பாடு செய்ததும் இவரே.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தனது இடைநீக்கத்தை ரத்து செய்ததை அவர் மயிலாப்பூர் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார். நான்கு அறங்காவலர்களின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் சாவியை திரும்ப ஒப்படைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம், விரைவில் அது மீண்டும் திறக்கப்படும். முன்பு போலவே, கோவிலில் அனைத்து திருவிழாக்கள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிர்வகிக்க உள்ளோம் என்று ஸ்ரீதர் கூறினார்.
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் கோவிலில் நடைபெற்ற கருட சேவையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
செய்தி : எஸ்.பிரபு
மயிலாப்பூர் பள்ளியில் படித்து வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு பொதுத் தேர்வுகளுக்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் பயிலும் பள்ளி…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் பிப்ரவரி 15 காலை முதல் பிப்ரவரி 16 காலை வரை திறந்திருக்கும்.…
பிப்ரவரி 9, திங்கட்கிழமை, மதிய நேரத்திற்குப் பிறகு, சென்னை மெட்ரோ திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM) இறுதியாக…
லஸ் அவென்யூவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் கடந்த வாரம் முறைப்படி திறக்கப்பட்டது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர்…
நீங்கள் ஒரு மூத்த குடிமகனா? இலவசமாக வழங்கப்படும் சிறிய நிகழ்வுகளில் உங்களுடன் ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் சேர ஆர்வமாக உள்ளீர்களா?…
டி' சில்வா சாலையில் உள்ள பிரபலமான சைவ உணவகமான ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம், சமீபத்தில் தனது உணவுப் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது –…