ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவிலில், பழைய நிர்வாக குழுவினரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து கைப்பற்றியது.

மேலும் கடந்த சில மாதங்களாக கோவில் அலுவலக கதவு பூட்டியே கிடக்கிறது.

கோவில் அறங்காவலர் தலைவர் என்.சி.ஸ்ரீதர், கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவிலுக்காக தனது பணியை முழு நேரமாக செலவிட்டதாகவும், எனவே இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மயிலாப்பூர் டைம்ஸிடம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் கோவிலில் ஏற்கனெவே வகித்த பதவியை மீண்டும் கையில் எடுத்து வழக்கமான நடைமுறையை செய்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த தெப்பத் திருவிழாவை ஏற்பாடு செய்ததும் இவரே.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தனது இடைநீக்கத்தை ரத்து செய்ததை அவர் மயிலாப்பூர் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார். நான்கு அறங்காவலர்களின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் சாவியை திரும்ப ஒப்படைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம், விரைவில் அது மீண்டும் திறக்கப்படும். முன்பு போலவே, கோவிலில் அனைத்து திருவிழாக்கள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிர்வகிக்க உள்ளோம் என்று ஸ்ரீதர் கூறினார்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் கோவிலில் நடைபெற்ற கருட சேவையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago