செய்திகள்

ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டுவரும் மாநகராட்சி கிளினிக்கில் தடுப்பூசி போடுவதற்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சியின் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையம் ஆழ்வார்பேட்டையின் பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இங்கு தினமும் சுமார் இருநூறு நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து காணப்படுவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்வார்பேட்டை பள்ளியில் செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மக்கள் காலையிலேயே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுச்செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு தடுப்பூசி போடுவதற்கு டோக்கன்கள் கொடுக்க ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள்ளேயே அனைத்து டோக்கன்களும் விநியோகிக்கும் அளவுக்கு மக்கள் இங்கு வருகின்றனர். மாநகராட்சியின் பல்வேறு கிளினிக்குகளில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாந்தோம் அப்பு தெருவில் உள்ள கிளினிக்கிற்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசிகள் வரவில்லை என்றும் அதனால் இங்கு யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் மக்கள் யாராவது தடுப்பூசி போடுவதற்கு வந்தால் ஆழ்வார்பேட்டை கிளினிக்கிற்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.

 

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

2 months ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago