சென்னை மாநகராட்சியின் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையம் ஆழ்வார்பேட்டையின் பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இங்கு தினமும் சுமார் இருநூறு நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து காணப்படுவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்வார்பேட்டை பள்ளியில் செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மக்கள் காலையிலேயே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுச்செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு தடுப்பூசி போடுவதற்கு டோக்கன்கள் கொடுக்க ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள்ளேயே அனைத்து டோக்கன்களும் விநியோகிக்கும் அளவுக்கு மக்கள் இங்கு வருகின்றனர். மாநகராட்சியின் பல்வேறு கிளினிக்குகளில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாந்தோம் அப்பு தெருவில் உள்ள கிளினிக்கிற்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசிகள் வரவில்லை என்றும் அதனால் இங்கு யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் மக்கள் யாராவது தடுப்பூசி போடுவதற்கு வந்தால் ஆழ்வார்பேட்டை கிளினிக்கிற்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…