செய்திகள்

ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டுவரும் மாநகராட்சி கிளினிக்கில் தடுப்பூசி போடுவதற்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சியின் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையம் ஆழ்வார்பேட்டையின் பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இங்கு தினமும் சுமார் இருநூறு நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து காணப்படுவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்வார்பேட்டை பள்ளியில் செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மக்கள் காலையிலேயே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுச்செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு தடுப்பூசி போடுவதற்கு டோக்கன்கள் கொடுக்க ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள்ளேயே அனைத்து டோக்கன்களும் விநியோகிக்கும் அளவுக்கு மக்கள் இங்கு வருகின்றனர். மாநகராட்சியின் பல்வேறு கிளினிக்குகளில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாந்தோம் அப்பு தெருவில் உள்ள கிளினிக்கிற்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசிகள் வரவில்லை என்றும் அதனால் இங்கு யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் மக்கள் யாராவது தடுப்பூசி போடுவதற்கு வந்தால் ஆழ்வார்பேட்டை கிளினிக்கிற்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.

 

admin

Recent Posts

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

2 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

2 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

3 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

3 days ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

4 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

4 days ago