வெள்ளிக்கிழமை இன்று காலை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் அல்லது ரங்கோலிகளை போடுவதற்க்கு திட்டமிட்டிருந்த அனைவரின் திட்டங்களையும் விடியற்காலை திடீரென பெய்த மழை தடையை ஏற்படுத்தியது.
மழை நின்ற பிறகு மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் உள்ள தெருக்களில் சென்று பார்க்கும் போது, சில கோலங்கள் மழையில் நனைந்திருந்ததை காண முடிந்தது. இந்த கோலங்கள் ஒருவேளை முந்தைய இரவில் வரையப்பட்டிருக்கலாம்.
சூரியன் வெளியே வந்ததும், ஒரு சில பெண்கள் சிறிய கோலம் வரைந்தனர்.
ஆனால் மழை ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. பெண்கள் வண்ணமயமான ரங்கோலிகளை வரைவதற்கு தெருக்களை சுத்தம் செய்தது. மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிரே உள்ள சிதம்பரசுவாமி கோயில் 2வது தெருவில் நாங்கள் நடந்து சென்றபோது, வரிசையாக சிறிய ரங்கோலிகள் மற்றும் கோலங்கள் போடப்பட்டிருந்தது.
விடுமுறையை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார இறுதி நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படுவதால், சிலர் கோவில் வாசல்களில் நின்று பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…