வெள்ளிக்கிழமை இன்று காலை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் அல்லது ரங்கோலிகளை போடுவதற்க்கு திட்டமிட்டிருந்த அனைவரின் திட்டங்களையும் விடியற்காலை திடீரென பெய்த மழை தடையை ஏற்படுத்தியது.
மழை நின்ற பிறகு மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் உள்ள தெருக்களில் சென்று பார்க்கும் போது, சில கோலங்கள் மழையில் நனைந்திருந்ததை காண முடிந்தது. இந்த கோலங்கள் ஒருவேளை முந்தைய இரவில் வரையப்பட்டிருக்கலாம்.
சூரியன் வெளியே வந்ததும், ஒரு சில பெண்கள் சிறிய கோலம் வரைந்தனர்.
ஆனால் மழை ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. பெண்கள் வண்ணமயமான ரங்கோலிகளை வரைவதற்கு தெருக்களை சுத்தம் செய்தது. மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிரே உள்ள சிதம்பரசுவாமி கோயில் 2வது தெருவில் நாங்கள் நடந்து சென்றபோது, வரிசையாக சிறிய ரங்கோலிகள் மற்றும் கோலங்கள் போடப்பட்டிருந்தது.
விடுமுறையை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார இறுதி நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படுவதால், சிலர் கோவில் வாசல்களில் நின்று பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…