டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பத்ரிநாதன். இவர் ஒரு முதுகலை எம்.எஸ்சி கணித பட்டதாரி. இவர் பல வேலைகளை தேடினார், வங்கியில் இருந்து கூட இவருக்கு வேலை வந்தது. ஆனால் இவர் தபால் நிலைய வேலையையே விரும்பி பணியில் சேர்ந்துள்ளார். ஏனென்றால் இவருடைய தந்தை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இவரும் தபால் துறையில் நாற்பது வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். போஸ்ட்மேனாக இருந்து பின்பு தலைமை பதவியில் பணியாற்றியவர். இவரது தந்தையும் தபால் அலுவலக வேலையில் சேர ஒரு காரணமாக இருந்துள்ளார்.
இந்த கொரோனா நேரத்தில் இவர் கைகளில் கையுறை அணிந்து தபால்களை விநியோகம் செய்து வருகிறார். இந்த நேரத்தில் அதிகளவில் கொரோனா தவிர்த்து வேறு நோய்களுக்கு வரும் மருந்து பார்சல்களை டெலிவரி செய்வதாக கூறுகிறார். அதே நேரத்தில் மக்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கி பணத்தை சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்து வருபவர்களில் யாராவது இறந்து போனால் அந்த பணபலன்களை அவருடைய குடும்பத்தாருக்கு பெற்று தரும் வேலையையும் செய்து வருகிறார். இது போன்ற சேவை செய்வது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…