Categories: சமூகம்

தேனாம்பேட்டை தபால்காரர் பத்ரிநாதன் மருந்து பார்சல்களை வழங்குகிறார், கொரோனா ஹாட் ஸ்பாட்களில் பணிபுரிகிறார்

டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பத்ரிநாதன். இவர் ஒரு முதுகலை எம்.எஸ்சி கணித பட்டதாரி. இவர் பல வேலைகளை தேடினார், வங்கியில் இருந்து கூட இவருக்கு வேலை வந்தது. ஆனால் இவர் தபால் நிலைய வேலையையே விரும்பி பணியில் சேர்ந்துள்ளார். ஏனென்றால் இவருடைய தந்தை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இவரும் தபால் துறையில் நாற்பது வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். போஸ்ட்மேனாக இருந்து பின்பு தலைமை பதவியில் பணியாற்றியவர். இவரது தந்தையும் தபால் அலுவலக வேலையில் சேர ஒரு காரணமாக இருந்துள்ளார்.

இந்த கொரோனா நேரத்தில் இவர் கைகளில் கையுறை அணிந்து தபால்களை விநியோகம் செய்து வருகிறார். இந்த நேரத்தில் அதிகளவில் கொரோனா தவிர்த்து வேறு நோய்களுக்கு வரும் மருந்து பார்சல்களை டெலிவரி செய்வதாக கூறுகிறார். அதே நேரத்தில் மக்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கி பணத்தை சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்து வருபவர்களில் யாராவது இறந்து போனால் அந்த பணபலன்களை அவருடைய குடும்பத்தாருக்கு பெற்று தரும் வேலையையும் செய்து வருகிறார். இது போன்ற சேவை செய்வது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

5 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago