பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழாவை பாரதிய வித்யா பவனில் நாடக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்.

நாடகம் மற்றும் சினிமா நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் நூறாவது வருட பிறந்த நாள் கடந்த வாரம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நகரில் உள்ள கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்.

விழாவில் மூத்த நாடக கலைஞர் T.D. சுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கினார். பூர்ணம் விஸ்வநாதன் குடுமபத்திற்கு ஆர்.நடராஜ் உறவினராவர். விழாவில் பூர்ணம் விஸ்வநாதன் மகன், காத்தாடி ராமமூர்த்தி, டாக்டர் சாய் மற்றும் பலர் நாடகங்களில் பூர்ணம் விஸ்வநாதனின் அளப்பரிய பங்கு பற்றியும், வாழ்க்கை பற்றியும், சினிமாவில் அவருடைய பங்கு பற்றியும் நினைவு கூர்ந்தனர்.

இந்த விழாவில் வயது மூப்படைந்திருந்தாலும் பூர்ணம் விஸ்வநாதனின் மனைவி கலந்து கொண்டார். அவருக்கு பலரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்வில் பாரதிய வித்யா பவனின் தலைவர் கே.என். ராமசாமி கலந்துகொண்டார். மேலும் அவர் பேசுகையில் நாடக கலைஞர்களுக்கு நாடகங்களை ஒத்திகை பார்ப்பதற்காக பாரதிய வித்யா பவனில் ஒரு சிறிய இடம் வழங்கப்படும் என்று கூறினார்.

admin

Recent Posts

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

6 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

22 hours ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

2 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

7 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

7 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

7 days ago