டாக்டர் ரங்கா சாலையில், சில இடங்களில் தொடர்ந்து வெளியேறி வரும் நிலத்தடி நீர்.

டாக்டர் ரங்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹேமலதா வசிக்கிறார். கடந்த ஐந்து நாட்களாக கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், இவரது வளாகத்தில் ஏற்கனேவே கட்டப்பட்ட பெரிய டேங்கில் இருந்து தண்ணீர் நீண்ட இரண்டு குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்.

டாக்டர் ரங்கா சாலையில் நவம்பர் 7-ம் தேதி பெய்த மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் இந்த பரபரப்பான சாலையை ஒட்டியுள்ள இரண்டு சந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் பாதை ஒன்றில் சில நாட்களாக சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஆனால், ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்கு குடும்பங்களைப் போல, இந்த சாலையில் வசிப்பவர்கள் சிலர், தரையில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். மழைநீர் சேகரிப்பு கிணறுகளை மூழ்கடித்த வளாகங்களிலும் இது தெளிவாகக் காணப்பட்டது. இங்கு வசிக்கும் ஒருவர், இங்கே தரை மட்டத்திலிருந்து ஒரு அடி தூரத்தில் நீர்மட்டம் உள்ளது என்று கூறுகிறார்.

ஆனால், ஹேமலதா மற்றும் அவரது குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். ஏனெனில் அவர்களின் நிலம் தாழ்வானது என்பதாலும், தண்ணீர் தானாகவே வெளியேறாததாலும், சுமார் 8/9 அடி ஆழமுள்ள தொட்டியிலிருந்து பம்பிங் செய்யும் போது தண்ணீர் குறையாமல் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருப்பதை உணர்ந்தனர்.

இங்கே நீர் மட்டம் அதிகளவு உயர்ந்து உள்ளதாக ஹேமலதா கூறுகிறார்.

இன்று, புதன்கிழமை இரண்டு குழாய்கள் சாலையில் தண்ணீரை வெளியேற்றுவதைக் காண முடிந்தது, அது கிழக்கு நோக்கி பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

மேலும் எங்கள் குடியிருப்பில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எங்கள் மின் இணைப்புகள் அனைத்தும் தரைதளத்தில்தான் உள்ளது. என்கிறார் ஹேமலதா.

மழைநீர் சேகரிப்பு நிபுணர் சேகர் ராகவன் கூறுகையில், நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்துள்ளது, பருவமழை தொடர்ந்து பொழிந்தால் நீர் கசிவை யாரும் தடுக்க முடியாது. ஜனவரியில் இருந்தே நீர் மட்டம் குறைய ஆரம்பிக்கும், என்று அவர் மேலும் கூறுகிறார்.

<< மழைக்குப் பிறகு, உங்கள் வளாகத்திலும் தண்ணீர் ஊற்றுபோல் வருகிறதா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்>>

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago