நாடகம் மற்றும் சினிமா நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் நூறாவது வருட பிறந்த நாள் கடந்த வாரம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நகரில் உள்ள கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்.
விழாவில் மூத்த நாடக கலைஞர் T.D. சுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கினார். பூர்ணம் விஸ்வநாதன் குடுமபத்திற்கு ஆர்.நடராஜ் உறவினராவர். விழாவில் பூர்ணம் விஸ்வநாதன் மகன், காத்தாடி ராமமூர்த்தி, டாக்டர் சாய் மற்றும் பலர் நாடகங்களில் பூர்ணம் விஸ்வநாதனின் அளப்பரிய பங்கு பற்றியும், வாழ்க்கை பற்றியும், சினிமாவில் அவருடைய பங்கு பற்றியும் நினைவு கூர்ந்தனர்.
இந்த விழாவில் வயது மூப்படைந்திருந்தாலும் பூர்ணம் விஸ்வநாதனின் மனைவி கலந்து கொண்டார். அவருக்கு பலரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்வில் பாரதிய வித்யா பவனின் தலைவர் கே.என். ராமசாமி கலந்துகொண்டார். மேலும் அவர் பேசுகையில் நாடக கலைஞர்களுக்கு நாடகங்களை ஒத்திகை பார்ப்பதற்காக பாரதிய வித்யா பவனில் ஒரு சிறிய இடம் வழங்கப்படும் என்று கூறினார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…