இந்த சி.ஐ.டி. காலனி பேக்கரி மூடப்பட்டது. ஆனால் பத்மா நாய்க் இப்போது ஹோம் பேக்கராக வேலை செய்கிறார்.

மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் வசித்து வரும் பத்மா நாய்க் அவர் கணவர் ஸ்ரீநிவாச நாய்க்குடன் இணைந்து பத்மஸ்ரீ புட்ஸ் என்ற பெயரில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பேக்கரி தொழிலை சி.ஐ.டி காலனியில் நடத்தி வருகிறார்.

சி.ஐ.டி காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தரைத்தளத்தில் நடத்தி வந்தனர். இந்த கடையில் கேக்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் கிடைக்கும்.

கொரோனா சூழ்நிலையில் தொழில் அவ்வளவாக நடக்காது என்பதாலும், இந்த தம்பதிகளுக்கு வயதாகிவிட்டது என்ற காணத்தினாலும் இந்த கடை சமீபத்தில் மூடப்பட்டது.

ஆனால் பத்மா நாய்க்கிற்கு நீண்ட பல வருடங்களாக இந்த பேக்கரி தொழிலில் ஆர்வம் என்பதால் இவர் தற்போது வீட்டிலேயே கேக்குக்குகளை செய்யும் ஹோம் பேக்கராக மாறியுள்ளார்.

தற்போது சில மாதங்களுக்கு பத்மா நாய்க் முட்டைபோடாத கேக்குகளையும் மற்றும் கிரீம் இல்லாத கேக்குகளை மட்டும் அவருடைய ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருவதாக கணவர் ஸ்ரீநிவாச நாய்க் கூறுகிறார்.

மேலும் இந்த கேக்குகளை பெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றும், பின்னர் கேக் தயார் செய்த பின்னர் வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும் அதன்பின் வாடிக்கையாளர் கேக் ஆர்டரை பிக்கப் செய்யவேண்டும்.

முகவரி : பத்மஸ்ரீ புட்ஸ், நெ.4, இரண்டாவது குறுக்கு தெரு, சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர்/ தொலைபேசி எண் : 2499 7567 / 9941404678.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago