ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை காலை சுமார் 8.30 மணியளவில் தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நேற்று முதலே கோவிலில் நடைபெற்று வருகிறது. தேர் ஊர்வலத்தின் போது எப்போதும் ஆங்காங்கே மக்களின் ஆரத்திக்காக தேர் நின்று செல்லும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக அது போல நிற்கவேண்டாம் என்று உள்ளூர் போலீசார்கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுநாள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளான அதிகாரநந்தி மற்றும் ரிஷபவாகனம் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வந்திருந்தது. எனவே நாளை நடைபெறும் தேர் ஊர்வலத்திற்கும் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓரளவிற்கு முகக்கவசம் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…