ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை காலை சுமார் 8.30 மணியளவில் தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நேற்று முதலே கோவிலில் நடைபெற்று வருகிறது. தேர் ஊர்வலத்தின் போது எப்போதும் ஆங்காங்கே மக்களின் ஆரத்திக்காக தேர் நின்று செல்லும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக அது போல நிற்கவேண்டாம் என்று உள்ளூர் போலீசார்கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுநாள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளான அதிகாரநந்தி மற்றும் ரிஷபவாகனம் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வந்திருந்தது. எனவே நாளை நடைபெறும் தேர் ஊர்வலத்திற்கும் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓரளவிற்கு முகக்கவசம் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…