ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை காலை சுமார் 8.30 மணியளவில் தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நேற்று முதலே கோவிலில் நடைபெற்று வருகிறது. தேர் ஊர்வலத்தின் போது எப்போதும் ஆங்காங்கே மக்களின் ஆரத்திக்காக தேர் நின்று செல்லும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக அது போல நிற்கவேண்டாம் என்று உள்ளூர் போலீசார்கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுநாள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளான அதிகாரநந்தி மற்றும் ரிஷபவாகனம் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வந்திருந்தது. எனவே நாளை நடைபெறும் தேர் ஊர்வலத்திற்கும் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓரளவிற்கு முகக்கவசம் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…