ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை காலை சுமார் 8.30 மணியளவில் தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நேற்று முதலே கோவிலில் நடைபெற்று வருகிறது. தேர் ஊர்வலத்தின் போது எப்போதும் ஆங்காங்கே மக்களின் ஆரத்திக்காக தேர் நின்று செல்லும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக அது போல நிற்கவேண்டாம் என்று உள்ளூர் போலீசார்கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுநாள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளான அதிகாரநந்தி மற்றும் ரிஷபவாகனம் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வந்திருந்தது. எனவே நாளை நடைபெறும் தேர் ஊர்வலத்திற்கும் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓரளவிற்கு முகக்கவசம் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…