தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நேற்று திங்கட்கிழமை அனைத்து சென்னை மாநகராட்சி கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு முன் மக்கள் தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி ஒரு புதிய முறையை பின்பற்றினர். புதிய முறையின் படி சென்னை மாநகராட்சி வலைதளத்தில் ஒரு வெப்லிங்கை உருவாக்கியிருந்தனர். மக்கள் இந்த குறிப்பிட்ட வெப்லிங்கின் மூலம் பதிவு செய்து குறிப்பிட்ட நாட்களில் அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதுபோன்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு தனியாக ஒரு பிரிவு மையங்களில் இயங்கி வந்தது.
ஆன்லைன் வழியாக பதிவு செய்து வருபவர்களுக்கு முப்பது சதவீத தடுப்பூசிகளையும், தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு நேரிடையாக வருபவர்களுக்கு சுமார் எழுபது சதவீதமும் தடுப்பூசி செலுத்தி வந்தனர். ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் உள்ள கிளினிக்கில் தடுப்பூசி கொடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக சென்னை மாநகராட்சி கிளினிக்கிற்கு அருகே பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் டோக்கன் கொடுக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து வந்தவர்களுக்கு ஒரு வரிசையும் நேரிடையாக வந்தவர்களுக்கு ஒரு வரிசையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆன்லைன் வழியாக தடுப்பூசி போட பதிவு செய்ய பொதுமக்கள் கீழே உள்ள வலைதள லிங்கை பயன்படுத்தி கொள்ளவும். https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…