சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. எனவே தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படவில்லை

தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நேற்று திங்கட்கிழமை அனைத்து சென்னை மாநகராட்சி கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு முன் மக்கள் தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி ஒரு புதிய முறையை பின்பற்றினர். புதிய முறையின் படி சென்னை மாநகராட்சி வலைதளத்தில் ஒரு வெப்லிங்கை உருவாக்கியிருந்தனர். மக்கள் இந்த குறிப்பிட்ட வெப்லிங்கின் மூலம் பதிவு செய்து குறிப்பிட்ட நாட்களில் அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதுபோன்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு தனியாக ஒரு பிரிவு மையங்களில் இயங்கி வந்தது.

ஆன்லைன் வழியாக பதிவு செய்து வருபவர்களுக்கு முப்பது சதவீத தடுப்பூசிகளையும், தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு நேரிடையாக வருபவர்களுக்கு சுமார் எழுபது சதவீதமும் தடுப்பூசி செலுத்தி வந்தனர். ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் உள்ள கிளினிக்கில் தடுப்பூசி கொடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக சென்னை மாநகராட்சி கிளினிக்கிற்கு அருகே பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் டோக்கன் கொடுக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து வந்தவர்களுக்கு ஒரு வரிசையும் நேரிடையாக வந்தவர்களுக்கு ஒரு வரிசையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

ஆன்லைன் வழியாக தடுப்பூசி போட பதிவு செய்ய பொதுமக்கள் கீழே உள்ள வலைதள லிங்கை பயன்படுத்தி கொள்ளவும். https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

8 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

1 day ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

2 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

5 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago