ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவில், தேவாலயத்தில் பூசைகள் முடிந்த பிறகு மாதா சிலை மற்றும் இதர சிலைகளுடன் தேவாலயம் சுற்றியுள்ள தெருக்களில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேர் பவனி நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் கோவிட் நேர விதிமுறைகளின் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே திருவிழா நடைபெறவுள்ளது. ஜனவரி 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூசையும் அதை தொடர்ந்து தேர் பவனி தெருக்களில் சாதாரணமாக நடைபெறும். இந்த தேர் தெருக்களில் எங்கும் நிற்காமல் செல்லும். அடுத்த நாள் 20ம் தேதி ஒரு சிறப்பு பூசை நடைபெற்ற பிறகு தேர் பவனி நடைபெறும். பாதிரியார் மேற்கண்ட அட்டவணைப்படியே விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…