கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிசம்பர் 20, 2020) மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலை மூன்று மணியளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கைரைக்கு வந்தனர்.
மெரினா கடற்கரை சாலையில் எந்தவிதமான வாகனங்களையும் நிறுத்த போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை. சர்வீஸ் சாலைகளில் மட்டுமே பார்க்கிங் செய்ய அனுமதித்தனர். ஆனால் இங்கு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. மேலும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசங்கள் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இங்கு தற்போது ஸ்னாக்ஸ், பொம்மைகள் விற்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மக்கள் இந்த கொரோனா நேரத்தில் கடற்கரையை திறப்பது தேவையான ஒன்றா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…