கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிசம்பர் 20, 2020) மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலை மூன்று மணியளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கைரைக்கு வந்தனர்.
மெரினா கடற்கரை சாலையில் எந்தவிதமான வாகனங்களையும் நிறுத்த போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை. சர்வீஸ் சாலைகளில் மட்டுமே பார்க்கிங் செய்ய அனுமதித்தனர். ஆனால் இங்கு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. மேலும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசங்கள் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இங்கு தற்போது ஸ்னாக்ஸ், பொம்மைகள் விற்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மக்கள் இந்த கொரோனா நேரத்தில் கடற்கரையை திறப்பது தேவையான ஒன்றா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…