கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிசம்பர் 20, 2020) மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலை மூன்று மணியளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கைரைக்கு வந்தனர்.
மெரினா கடற்கரை சாலையில் எந்தவிதமான வாகனங்களையும் நிறுத்த போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை. சர்வீஸ் சாலைகளில் மட்டுமே பார்க்கிங் செய்ய அனுமதித்தனர். ஆனால் இங்கு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. மேலும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசங்கள் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இங்கு தற்போது ஸ்னாக்ஸ், பொம்மைகள் விற்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மக்கள் இந்த கொரோனா நேரத்தில் கடற்கரையை திறப்பது தேவையான ஒன்றா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…