கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிசம்பர் 20, 2020) மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலை மூன்று மணியளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கைரைக்கு வந்தனர்.
மெரினா கடற்கரை சாலையில் எந்தவிதமான வாகனங்களையும் நிறுத்த போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை. சர்வீஸ் சாலைகளில் மட்டுமே பார்க்கிங் செய்ய அனுமதித்தனர். ஆனால் இங்கு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. மேலும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசங்கள் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இங்கு தற்போது ஸ்னாக்ஸ், பொம்மைகள் விற்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மக்கள் இந்த கொரோனா நேரத்தில் கடற்கரையை திறப்பது தேவையான ஒன்றா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…