மெரினா மணலில் சில இடங்களில் நசுங்கி கிடக்கும் ஆமைகள்.

மெரினா கடற்கரையோரத்தில் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் கடற்கரையோரத்தில் நிறைய ஆமைகளை பார்த்துள்ளதாகவும், சில இடங்களில் ஆமைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் நசுங்கி கிடைப்பதாவும் தெரிவித்துள்ளனர். மேலும் அது சம்பந்தமாக சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

ஆமைகள் தற்போது கலோரத்தில் முட்டையிடும் பருவம். நூற்றுக்கணக்கான ஆமைகள் மெரினா கடற்கரை முதல் கிழக்கு கடற்கரை கானத்தூர் வரை இந்த பருவத்தில் வந்து முட்டையிடும். சில ஆமைகள் மீனவர்களின் வலைகளில் சிக்கி இறந்துவிடுகிறது. மேலும் ஆமைகள் கடற்கரையோரம் தெரு நாய்களால் வேட்டையாடப்படும் சூழ்நிலையும் உள்ளது. சில நேரம் கற்கரையோரம் வசிக்கும் மக்களால் எடுக்கப்பட்டு அங்கு விற்கப்படுகிறது.

இது போன்று ஆமை முட்டைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததல், கடந்த சில வருடங்களாக தனியார் தொண்டு நிறுவனங்களும், வனத்துறையினரும் மற்றும் தன்னார்வலர்களும் சேர்ந்து மெரினா முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை உள்ள கடற்கரையோரம் ரோந்து பணியில் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஈடுபடுவர். பின்னர் அங்கிருந்து முட்டைகளை சேகரித்து ஒரே இடத்தில் வைத்து பாதுகாத்து பின்னர் கடலுக்குள் அனுப்புவர்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

4 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago