வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் கருடசேவை ஊர்வலம் நடைபெறும். எளிதாக தரிசனம் செய்யவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கோயில் நாள் முழுவதும் திறந்தே இருக்கும். மாலையில் ஆண்டாள் திரு கல்யாண உற்சவம் நடைபெறும். ஸ்ரீநிவாசப் பெருமாள், நம்மாழ்வார், ஆண்டாள் இணைந்த தேரோட்டம் நடைபெறும்.
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில், ஜனவரி 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் கோவில் நடை திறக்கப்படும், என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி: எஸ்.பிரபு
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…
ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…