வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் உள்ளது, உங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலுடன் முகாமில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த முகாம் மயிலாப்பூரில் பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகளிலும் (அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடிகள்), சமுதாய நலக்கூடங்களிலும், சில தனியார்மண்டபங்களிலும் நடைபெறுகிறது. இது வருகிற மே மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல்களில் பெயரில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்களை சேர்க்க நடைபெறும் கடைசி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…