Categories: சமூகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் உள்ளது, உங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலுடன் முகாமில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த முகாம் மயிலாப்பூரில் பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகளிலும் (அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடிகள்), சமுதாய நலக்கூடங்களிலும், சில தனியார்மண்டபங்களிலும் நடைபெறுகிறது. இது வருகிற மே மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல்களில் பெயரில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்களை சேர்க்க நடைபெறும் கடைசி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago