Categories: சமூகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் உள்ளது, உங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலுடன் முகாமில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த முகாம் மயிலாப்பூரில் பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகளிலும் (அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடிகள்), சமுதாய நலக்கூடங்களிலும், சில தனியார்மண்டபங்களிலும் நடைபெறுகிறது. இது வருகிற மே மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல்களில் பெயரில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்களை சேர்க்க நடைபெறும் கடைசி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago