வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் உள்ளது, உங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலுடன் முகாமில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த முகாம் மயிலாப்பூரில் பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகளிலும் (அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடிகள்), சமுதாய நலக்கூடங்களிலும், சில தனியார்மண்டபங்களிலும் நடைபெறுகிறது. இது வருகிற மே மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல்களில் பெயரில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்களை சேர்க்க நடைபெறும் கடைசி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…