நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை 2021 தேர்தல் தேதி அறிவித்த பிறகு இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள சுவரொட்டிகள், கட்சி விளம்பரங்கள், போன்றவற்றை அழித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், இந்த பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர். கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் விளம்பரத்துக்காக சுவர்களில் ஆங்காங்கே வெள்ளை அடித்து வைத்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விதியின்படி தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்யக்கூடாது. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே தேர்தல் விளம்பரங்கள் அவர்களின் சுவர்களில் எழுதலாம்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…