சென்னை நகரிலும் மயிலாப்பூர் பகுதியிலும் இந்த பருவமழையின் முதல் சீசனில் நிறைய இடங்களில் நீர் ஊற்று அதிகமாகி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இது சம்பந்தமாக மயிலாப்பூர் டைம்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளோம். ஏற்கெனெவே டாக்டர். ரங்கா சாலை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பலர், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் ஊற்று அதிகமாகி ஆங்காங்கே நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்று அடையாறு காந்தி நகரில் மழை நீர் சேமிப்பு சம்பந்தமான மையத்தை நடத்தி வரும் டாக்டர் சேகர் ராகவனிடம் கேட்டபோது, அவர் தற்போதைக்கு இந்த பிரச்சனையை சரி செய்ய முடியாது என்றும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பருவமழை சீசன் முடிந்த பிறகு பூமியில் சுமார் 30 அடிக்கு ஒரு டியூப்வெல் அமைத்தால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு இந்த நீரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கிறார். இதற்கு செலவு சுமார் முப்பதாயிரம் வரை ஆகும் என்று தெரிவிக்கிறார்.
மேலும் தற்போது அமைத்துள்ள போர்வெல் நூறு நூற்றைம்பது அடிக்கு மேல் உள்ளதால் போர்வெல் வழியாக தற்போது ஊறியுள்ள தண்ணீரை தனியாக சேமிக்க முடியாது என்றும், இதற்கென தனியாக டியூப்வெல் அமைக்க வேண்டும் என்று சேகர் ராகவன் தெரிவிக்கிறார்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…