மயிலாப்பூரில் பருவமழையின் காரணமாக வெகுவாக உயர்ந்துள்ள நீர் மட்டம். ஒரு சில இடங்களில் நீர் கசிவும் ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரிலும் மயிலாப்பூர் பகுதியிலும் இந்த பருவமழையின் முதல் சீசனில் நிறைய இடங்களில் நீர் ஊற்று அதிகமாகி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இது சம்பந்தமாக மயிலாப்பூர் டைம்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளோம். ஏற்கெனெவே டாக்டர். ரங்கா சாலை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பலர், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் ஊற்று அதிகமாகி ஆங்காங்கே நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்று அடையாறு காந்தி நகரில் மழை நீர் சேமிப்பு சம்பந்தமான மையத்தை நடத்தி வரும் டாக்டர் சேகர் ராகவனிடம் கேட்டபோது, அவர் தற்போதைக்கு இந்த பிரச்சனையை சரி செய்ய முடியாது என்றும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பருவமழை சீசன் முடிந்த பிறகு பூமியில் சுமார் 30 அடிக்கு ஒரு டியூப்வெல் அமைத்தால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு இந்த நீரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கிறார். இதற்கு செலவு சுமார் முப்பதாயிரம் வரை ஆகும் என்று தெரிவிக்கிறார்.

மேலும் தற்போது அமைத்துள்ள போர்வெல் நூறு நூற்றைம்பது அடிக்கு மேல் உள்ளதால் போர்வெல் வழியாக தற்போது ஊறியுள்ள தண்ணீரை தனியாக சேமிக்க முடியாது என்றும், இதற்கென தனியாக டியூப்வெல் அமைக்க வேண்டும் என்று சேகர் ராகவன் தெரிவிக்கிறார்.

மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் பீமன்னப்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் மழை நீர் தேங்கியுள்ளது.

 

File Photo: மழை நீர் சேமிப்பு
File Photo: மழை நீர் சேமிப்பு
admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago