செய்திகள்

மழையால் பாதிப்படைந்த மந்தைவெளி குடியிருப்பாளர்களுக்கு கைகொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்

மழை வெள்ளத்தில் 48 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மந்தைவெளி காலனியில் வசிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற போராட்டத்தில் குரல் எழுப்ப முயன்றவர்களிடம் தி.மு.க.வினர் வாக்குவாத சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனையை போக்க உள்ளூர் காவல்துறை மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வின் தலையீடு தேவைப்பட்டது.

சமீபகாலமாக செயின்ட் மேரிஸ் ரோடு – தேவநாதன் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் சென்றுள்ளது.

நவம்பர் 11ம் தேதி மாலையில், மந்தைவெளி தபால் நிலையம் எதிரே உள்ள சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், இப்பகுதியில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் அமைந்துள்ள மெட்ரோவாட்டர் பம்பிங் ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இப்பகுதியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைநீரும், கழிவுநீரும் கலந்து பல வீடுகளில் தேங்கி நின்றது. இது சம்பந்தமாக உள்ளூர் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடியிருப்பாளர்கள் சிலர் வெள்ளிக்கிழமை மதியம் தெருவில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இரண்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் கொஞ்ச நேரத்தில் பல திமுக தொண்டர்கள் வந்து போராட்டத்தில் குரல் எழுப்பியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு (தி.மு.க.வைச் சேர்ந்த) போலீஸாரைப் போலவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இந்த பிரச்சனையை சரிசெய்தார்.

<< புகைப்படம் : வெங்கி ஹரி >>

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

2 months ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago