மழையால் பாதிப்படைந்த மந்தைவெளி குடியிருப்பாளர்களுக்கு கைகொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்

மழை வெள்ளத்தில் 48 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மந்தைவெளி காலனியில் வசிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற போராட்டத்தில் குரல் எழுப்ப முயன்றவர்களிடம் தி.மு.க.வினர் வாக்குவாத சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனையை போக்க உள்ளூர் காவல்துறை மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வின் தலையீடு தேவைப்பட்டது.

சமீபகாலமாக செயின்ட் மேரிஸ் ரோடு – தேவநாதன் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் சென்றுள்ளது.

நவம்பர் 11ம் தேதி மாலையில், மந்தைவெளி தபால் நிலையம் எதிரே உள்ள சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், இப்பகுதியில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் அமைந்துள்ள மெட்ரோவாட்டர் பம்பிங் ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இப்பகுதியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைநீரும், கழிவுநீரும் கலந்து பல வீடுகளில் தேங்கி நின்றது. இது சம்பந்தமாக உள்ளூர் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடியிருப்பாளர்கள் சிலர் வெள்ளிக்கிழமை மதியம் தெருவில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இரண்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் கொஞ்ச நேரத்தில் பல திமுக தொண்டர்கள் வந்து போராட்டத்தில் குரல் எழுப்பியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு (தி.மு.க.வைச் சேர்ந்த) போலீஸாரைப் போலவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இந்த பிரச்சனையை சரிசெய்தார்.

<< புகைப்படம் : வெங்கி ஹரி >>

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

2 days ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

2 days ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

4 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

4 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

4 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

4 days ago