மழையால் பாதிப்படைந்த மந்தைவெளி குடியிருப்பாளர்களுக்கு கைகொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்

மழை வெள்ளத்தில் 48 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மந்தைவெளி காலனியில் வசிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற போராட்டத்தில் குரல் எழுப்ப முயன்றவர்களிடம் தி.மு.க.வினர் வாக்குவாத சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனையை போக்க உள்ளூர் காவல்துறை மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வின் தலையீடு தேவைப்பட்டது.

சமீபகாலமாக செயின்ட் மேரிஸ் ரோடு – தேவநாதன் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் சென்றுள்ளது.

நவம்பர் 11ம் தேதி மாலையில், மந்தைவெளி தபால் நிலையம் எதிரே உள்ள சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், இப்பகுதியில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் அமைந்துள்ள மெட்ரோவாட்டர் பம்பிங் ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இப்பகுதியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைநீரும், கழிவுநீரும் கலந்து பல வீடுகளில் தேங்கி நின்றது. இது சம்பந்தமாக உள்ளூர் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடியிருப்பாளர்கள் சிலர் வெள்ளிக்கிழமை மதியம் தெருவில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இரண்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் கொஞ்ச நேரத்தில் பல திமுக தொண்டர்கள் வந்து போராட்டத்தில் குரல் எழுப்பியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு (தி.மு.க.வைச் சேர்ந்த) போலீஸாரைப் போலவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இந்த பிரச்சனையை சரிசெய்தார்.

<< புகைப்படம் : வெங்கி ஹரி >>

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago