சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழா (கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம்) பல வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கோவிட்-19 காரணமாக சில சபாக்கள் ஆன்லைனிலும் சில சபாக்களில் குறைந்த அளவு ரசிகர்களை கொண்டு வழக்கம் போல சபா ஆடிட்டோரியத்தில் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த இசை விழாவின் போது ஒவ்வொரு சபாக்களிலும் சென்னையில் சிறந்த முறையில் கேட்டரிங் செய்பவர்கள் சபாவிலும் வந்து கேட்டரிங் நடத்துவார்கள். இந்த முறை அதே போன்று கேட்டரிங் சேவைகள் சபாவில் நடைபெறுமா என்பது பற்றி சரியான தகவல் இல்லை. ஆனால் சாஸ்தா கேட்டரிங் சர்வீஸ் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சபாவில் டிசம்பர் 15ம் தேதி முதல் கேண்டீன் திறக்கவுள்ளனர். இங்கு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை ஸ்னாக்ஸ், இரவு டிபன் வழங்கவுள்ளனர். இங்கு கேன்டீனில் அமர்ந்தும் சாப்பிடலாம். பார்சல் சேவையும் உண்டு. மேலும் டன்சோ வழியாகவும் ஆர்டர் செய்யலாம். இவர்களின் சிறப்பு என்னவென்றால் தினமும் விதவிதமான உணவு வகைகளை வழங்குவர். இந்த கோவிட் தொற்று நேரத்தில் கூட சபாவில் கச்சேரி இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களின் கேட்டரிங் சேவை வழக்கம் போல் இயங்குகிறது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…