சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழா (கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம்) பல வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கோவிட்-19 காரணமாக சில சபாக்கள் ஆன்லைனிலும் சில சபாக்களில் குறைந்த அளவு ரசிகர்களை கொண்டு வழக்கம் போல சபா ஆடிட்டோரியத்தில் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த இசை விழாவின் போது ஒவ்வொரு சபாக்களிலும் சென்னையில் சிறந்த முறையில் கேட்டரிங் செய்பவர்கள் சபாவிலும் வந்து கேட்டரிங் நடத்துவார்கள். இந்த முறை அதே போன்று கேட்டரிங் சேவைகள் சபாவில் நடைபெறுமா என்பது பற்றி சரியான தகவல் இல்லை. ஆனால் சாஸ்தா கேட்டரிங் சர்வீஸ் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சபாவில் டிசம்பர் 15ம் தேதி முதல் கேண்டீன் திறக்கவுள்ளனர். இங்கு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை ஸ்னாக்ஸ், இரவு டிபன் வழங்கவுள்ளனர். இங்கு கேன்டீனில் அமர்ந்தும் சாப்பிடலாம். பார்சல் சேவையும் உண்டு. மேலும் டன்சோ வழியாகவும் ஆர்டர் செய்யலாம். இவர்களின் சிறப்பு என்னவென்றால் தினமும் விதவிதமான உணவு வகைகளை வழங்குவர். இந்த கோவிட் தொற்று நேரத்தில் கூட சபாவில் கச்சேரி இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களின் கேட்டரிங் சேவை வழக்கம் போல் இயங்குகிறது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…