சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழா (கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம்) பல வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கோவிட்-19 காரணமாக சில சபாக்கள் ஆன்லைனிலும் சில சபாக்களில் குறைந்த அளவு ரசிகர்களை கொண்டு வழக்கம் போல சபா ஆடிட்டோரியத்தில் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த இசை விழாவின் போது ஒவ்வொரு சபாக்களிலும் சென்னையில் சிறந்த முறையில் கேட்டரிங் செய்பவர்கள் சபாவிலும் வந்து கேட்டரிங் நடத்துவார்கள். இந்த முறை அதே போன்று கேட்டரிங் சேவைகள் சபாவில் நடைபெறுமா என்பது பற்றி சரியான தகவல் இல்லை. ஆனால் சாஸ்தா கேட்டரிங் சர்வீஸ் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சபாவில் டிசம்பர் 15ம் தேதி முதல் கேண்டீன் திறக்கவுள்ளனர். இங்கு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை ஸ்னாக்ஸ், இரவு டிபன் வழங்கவுள்ளனர். இங்கு கேன்டீனில் அமர்ந்தும் சாப்பிடலாம். பார்சல் சேவையும் உண்டு. மேலும் டன்சோ வழியாகவும் ஆர்டர் செய்யலாம். இவர்களின் சிறப்பு என்னவென்றால் தினமும் விதவிதமான உணவு வகைகளை வழங்குவர். இந்த கோவிட் தொற்று நேரத்தில் கூட சபாவில் கச்சேரி இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களின் கேட்டரிங் சேவை வழக்கம் போல் இயங்குகிறது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…