மந்தைவெளியில் புதிய மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

திங்கள்கிழமை, செப்டம்பர் 9, எம்.டி.சி பேருந்து நிலையம் எதிரே உள்ள மந்தைவெளியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான விற்பனைக் கடைக்கு எதிராக சுற்றுவட்டாரப் பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

இக்கடை கடந்த 3 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில், இதுவரை அடையாள பலகை இல்லை.

இந்த கடையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள் நண்பகலில் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டு பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கடையை சுற்றிலும் சில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில், மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒரே ஒரு கடை மட்டுமே, திருமயிலை ரயில் நிலையத்திற்கு அப்பால் இருந்தது. இங்கு சென்னை மெட்ரோ பணி தொடங்கிய போது அதுவும் நிறுத்தப்பட்டது.

செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics