மூன்றாவது நாளாக வெயில் சுட்டெரித்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் பம்புகள் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் முழங்கால் உயரத்திற்கு நீர் உயர்ந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. இயந்திரங்கள் மூலம் மழை நீர் டி.டி.கே சாலையில் வெளியேற்றப்பட்டது, ஆனால் மறுபுறம் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டது.
தற்போது, பணியாளர்கள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீருடன் கழிவுநீர் கலந்து, காலனியில் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழைநீரை விட தெருக்களில் கழிவுநீரே அதிகம் உள்ளது.
டி.டி.கே சாலையில் இருந்து செல்லும் தெருவின் மையப் பகுதி வறண்ட நிலையில், காலனிக்குள் சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2015-ல் வெள்ளத்தில் காலனி நீரில் மூழ்கியது. தற்போதைய வெள்ளம் மீண்டும் அதை நினைவு படுத்தும் விதம் இருந்தது. ஆனால் இப்பிரச்சனைக்கு இன்னும் நிரந்திர தீர்வு எட்டப்படவில்லை.
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…