இந்த குப்பம் பகுதியில் உள்ள 20 நபர்கள் ஆண்களும் பெண்களும் தமிழில் கையொப்பமிட்டு படிக்க முடியும் என்று பெருமிதம் கொள்கிறார்கள்

ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் கடந்த சனிக்கிழமை சுமார் இருபது பேர் கொண்ட அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பட்டமளிப்பு விழா உடையணிந்து பட்டங்கள் பெற வந்திருந்தனர். செய்தி என்னவென்றால் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக மெரினா குப்பம் ஓரமாக உள்ள முள்ளிமாநகரில் உள்ள மக்களுக்கு தமிழில் கையெழுத்து போடுவதற்கும், பத்திரிக்கைகள் வாசிப்பதற்கும், புத்தகங்கள் படிப்பதற்கும் தெரியாத மக்களுக்கு பயிற்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனமான டிகினிட்டி பவுண்டேசன் சென்னை சேப்டர் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மூத்த குடிமக்கள் பட்டங்கள் பெறுவதற்கு வந்திருந்தனர்.

இது தவிர தினமும் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பாட்டு பாடுதல், கதை சொல்லுதல், நடனமாடுதல் போன்ற இதர பயிற்சிகளும் இங்குள்ள பெண்களுக்கு டிகினிட்டி பவுண்டேசன் சார்பாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் இந்த வட்டாரத்திலிலுள்ள சுமார் எண்பது பெண்கள் கலந்து கொள்வதாக டிகினிட்டி பவுண்டேசன் தெரிவித்துள்ளது.

<< இது போன்று உங்கள் பகுதியில் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள் >>

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago