மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின் தீவிர முயற்சியினால் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டது.
மக்கள் தற்போது அதே போன்று ஏற்கெனெவே இயங்கி வந்த இரண்டு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ஒன்று 3A வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் பகுதியிலிருந்து பிராட்வே வரை டாக்டர் ரங்காரோடு, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, மவுண்ட்ரோடு வழியாக இயக்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழியாக பேருந்து சேவையே தற்போது இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மற்றொரு வழித்தடமான 23B (மயிலாப்பூரிலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை) பேருந்தையும் மக்கள் மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழித்தடமும் ஏற்கனெவே இயக்கப்பட்டு வந்த வழித்தடம்தான் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…