3A மற்றும் 23B வழித்தடங்களில் MTC பேருந்துகளை மீண்டும் இயக்க மக்கள் வேண்டுகோள்.

மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின் தீவிர முயற்சியினால் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

மக்கள் தற்போது அதே போன்று ஏற்கெனெவே இயங்கி வந்த இரண்டு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ஒன்று 3A வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் பகுதியிலிருந்து பிராட்வே வரை டாக்டர் ரங்காரோடு, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, மவுண்ட்ரோடு வழியாக இயக்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழியாக பேருந்து சேவையே தற்போது இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மற்றொரு வழித்தடமான 23B (மயிலாப்பூரிலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை) பேருந்தையும் மக்கள் மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழித்தடமும் ஏற்கனெவே இயக்கப்பட்டு வந்த வழித்தடம்தான் என்று தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics