இன்று சனிக்கிழமை காலை 8மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு ஆதார் கார்டு முகாம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதியதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளை தகுந்த ஆவணங்களுடன் வந்து பெற்றுச் செல்லலாம். இன்று இதற்கென சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் இங்கு ஆதார் விண்ணப்பம் செய்யலாம். இதே போன்று நொச்சிக்குப்பத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு கவுண்டர் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமை தவறவிட்டவர்கள் வார நாட்களில் ஏதேனும் ஒரு தபால் நிலையத்தில் ஆதார் சம்பந்தமான விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…