இன்று சனிக்கிழமை காலை 8மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு ஆதார் கார்டு முகாம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதியதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளை தகுந்த ஆவணங்களுடன் வந்து பெற்றுச் செல்லலாம். இன்று இதற்கென சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் இங்கு ஆதார் விண்ணப்பம் செய்யலாம். இதே போன்று நொச்சிக்குப்பத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு கவுண்டர் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமை தவறவிட்டவர்கள் வார நாட்களில் ஏதேனும் ஒரு தபால் நிலையத்தில் ஆதார் சம்பந்தமான விண்ணப்பங்களை அளிக்கலாம்.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…