செய்திகள்

மூத்தகுடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இலவச பயணச்சீட்டு வழங்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கி வந்தனர். இந்த திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டுகளை மாநகர் முழுவதும் அனைத்து பேருந்து முனையங்களிலும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியில் மந்தைவெளி பேருந்து முனையத்தில் இலவச பயணச்சீட்டு வழங்கி வருகின்றனர். அறுபது வயது நிரம்பியவர்கள் இலவச பயணச்சீட்டு பெற தகுதியானவர்கள். இந்த இலவச பயணச்சீட்டின் மூலம் மாநகர பேருந்துகளில் மாதத்திற்கு பத்து முறை பயணம் செய்யலாம்.

ஆறு மாதத்திற்கு மொத்தமாகவும் இந்த இலவச பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பேருந்து முனையத்திலேயே விண்ணப்பம் செய்யலாம். இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

admin

Recent Posts

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

3 hours ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

3 hours ago

பி.எஸ்.பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ரத்த தான முகாம். மே 1

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…

3 hours ago

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

2 days ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

2 days ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

2 days ago