இன்று சனிக்கிழமை காலை 8மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு ஆதார் கார்டு முகாம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதியதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளை தகுந்த ஆவணங்களுடன் வந்து பெற்றுச் செல்லலாம். இன்று இதற்கென சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் இங்கு ஆதார் விண்ணப்பம் செய்யலாம். இதே போன்று நொச்சிக்குப்பத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு கவுண்டர் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமை தவறவிட்டவர்கள் வார நாட்களில் ஏதேனும் ஒரு தபால் நிலையத்தில் ஆதார் சம்பந்தமான விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…