சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி சி.பி. இராமசாமி சாலை மற்றும் கீர்த்திலால் நகை கடை சந்திப்பு அருகில் உள்ள பீமண்ண கார்டன் தெருவில் உள்ளது. இனிமேல் தினமும் தடுப்பூசி இங்கு போடப்படும். இன்று காலை சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்த இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வந்த சிலரை இந்த மையத்திற்கு வரவழைத்து தடுப்பூசி போட்டனர். இங்கு தன்னார்வலர்களும் சிலர் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த புதிய தடுப்பூசி போடும் மையம் ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து நடந்து செல்லும் தூரமே என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…