சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி சி.பி. இராமசாமி சாலை மற்றும் கீர்த்திலால் நகை கடை சந்திப்பு அருகில் உள்ள பீமண்ண கார்டன் தெருவில் உள்ளது. இனிமேல் தினமும் தடுப்பூசி இங்கு போடப்படும். இன்று காலை சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்த இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வந்த சிலரை இந்த மையத்திற்கு வரவழைத்து தடுப்பூசி போட்டனர். இங்கு தன்னார்வலர்களும் சிலர் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த புதிய தடுப்பூசி போடும் மையம் ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து நடந்து செல்லும் தூரமே என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…