சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி சி.பி. இராமசாமி சாலை மற்றும் கீர்த்திலால் நகை கடை சந்திப்பு அருகில் உள்ள பீமண்ண கார்டன் தெருவில் உள்ளது. இனிமேல் தினமும் தடுப்பூசி இங்கு போடப்படும். இன்று காலை சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்த இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வந்த சிலரை இந்த மையத்திற்கு வரவழைத்து தடுப்பூசி போட்டனர். இங்கு தன்னார்வலர்களும் சிலர் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த புதிய தடுப்பூசி போடும் மையம் ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து நடந்து செல்லும் தூரமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…