பருவ மழையால் மயிலாப்பூர் பகுதியில் நிரம்பி வழியும் கோவில் குளங்கள்.

மயிலாப்பூர் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை பருவமழை பெய்ததால், அனைத்து கோவில் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை சுற்றியுள்ள தெருக்களில் இருந்து கடந்த பதினைந்து நாட்களாக தண்ணீர் வந்ததால் குளத்தில் தற்போது தண்ணீர் வேகமாக உயர்ந்து வருகிறது. குளத்தின் படிகளில் ஐந்து படி நிலைகளை மட்டுமே இப்போது பார்க்க முடியும்.

இங்குள்ள நந்தவனத்தை பராமரிக்கும் ஸ்ரீகாந்த், தினமும் கோவிலில் பூக்களைக் கொடுப்பதற்காகவும், கார்த்திகை தீபத்திற்காக 3000 விளக்குகளை ஏற்றி வைப்பதற்காகவும் திட்டிமிட்டுருந்த ஸ்ரீகாந்த், மழையின் காரணமாக படிகளில் கவனமாக நடக்க வேண்டும் என்றும், இங்கு நீர்மட்டம் உயருவதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள் கோயிலின் குளமான சித்திரகுளம் தற்போது நிரம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் மிதக்கின்றன.

ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில் குளங்களும் நிரம்பி வருகின்றன, சுமார் 75% மழைநீர் நிரம்பியுள்ளது.

செய்தி: மதன் குமார்

Verified by ExactMetrics