பருவ மழையால் மயிலாப்பூர் பகுதியில் நிரம்பி வழியும் கோவில் குளங்கள்.

மயிலாப்பூர் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை பருவமழை பெய்ததால், அனைத்து கோவில் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை சுற்றியுள்ள தெருக்களில் இருந்து கடந்த பதினைந்து நாட்களாக தண்ணீர் வந்ததால் குளத்தில் தற்போது தண்ணீர் வேகமாக உயர்ந்து வருகிறது. குளத்தின் படிகளில் ஐந்து படி நிலைகளை மட்டுமே இப்போது பார்க்க முடியும்.

இங்குள்ள நந்தவனத்தை பராமரிக்கும் ஸ்ரீகாந்த், தினமும் கோவிலில் பூக்களைக் கொடுப்பதற்காகவும், கார்த்திகை தீபத்திற்காக 3000 விளக்குகளை ஏற்றி வைப்பதற்காகவும் திட்டிமிட்டுருந்த ஸ்ரீகாந்த், மழையின் காரணமாக படிகளில் கவனமாக நடக்க வேண்டும் என்றும், இங்கு நீர்மட்டம் உயருவதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள் கோயிலின் குளமான சித்திரகுளம் தற்போது நிரம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் மிதக்கின்றன.

ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில் குளங்களும் நிரம்பி வருகின்றன, சுமார் 75% மழைநீர் நிரம்பியுள்ளது.

செய்தி: மதன் குமார்

admin

Recent Posts

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

14 hours ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

2 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

7 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

7 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

7 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

1 week ago