பருவ மழையால் மயிலாப்பூர் பகுதியில் நிரம்பி வழியும் கோவில் குளங்கள்.

மயிலாப்பூர் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை பருவமழை பெய்ததால், அனைத்து கோவில் குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை சுற்றியுள்ள தெருக்களில் இருந்து கடந்த பதினைந்து நாட்களாக தண்ணீர் வந்ததால் குளத்தில் தற்போது தண்ணீர் வேகமாக உயர்ந்து வருகிறது. குளத்தின் படிகளில் ஐந்து படி நிலைகளை மட்டுமே இப்போது பார்க்க முடியும்.

இங்குள்ள நந்தவனத்தை பராமரிக்கும் ஸ்ரீகாந்த், தினமும் கோவிலில் பூக்களைக் கொடுப்பதற்காகவும், கார்த்திகை தீபத்திற்காக 3000 விளக்குகளை ஏற்றி வைப்பதற்காகவும் திட்டிமிட்டுருந்த ஸ்ரீகாந்த், மழையின் காரணமாக படிகளில் கவனமாக நடக்க வேண்டும் என்றும், இங்கு நீர்மட்டம் உயருவதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள் கோயிலின் குளமான சித்திரகுளம் தற்போது நிரம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் மிதக்கின்றன.

ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில் குளங்களும் நிரம்பி வருகின்றன, சுமார் 75% மழைநீர் நிரம்பியுள்ளது.

செய்தி: மதன் குமார்

admin

Recent Posts

அக்னி நட்சத்திரத்துடன் தொடர்புடைய இந்த கோவிலுக்கு விழாவின் இறுதி நிகழ்வாக காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் நன்கொடையாக வழங்குகிறார்கள்.

கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…

11 hours ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…

2 days ago

‘டூரிஸ்ட் ஃபேமிலி’, பிரபல தமிழ் திரைப்படம், இன்று (மே 30) ஆர் ஆர் சபாவில் திரையிடப்படுகிறது

மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…

3 days ago

பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச், எஸ்.எஸ்.எல்.சி (11 ‘ஏ’ பிரிவு) ஆண்களின் சந்திப்பு நிகழ்ச்சி.

பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…

3 days ago

மறுசுழற்சி சவால்: மயிலாப்பூர் குழுக்கள்/குடியிருப்பாளர்கள் பதிவு செய்ய அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…

3 days ago

ராணி மேரி கல்லூரிக்கு புதிய விடுதி

ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…

3 days ago