தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையடுத்து அங்கன்வாடி பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் பகுதியில் மூன்று அங்கன்வாடி பள்ளிகள் உள்ளது. இங்கு செப்டம்பர் 2ம் தேதி அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. பாடங்களும் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு அங்கன்வாடி பள்ளியிலும் பதினைந்து குழ்நதைகளுக்கு மட்டுமே வருவதற்கு தற்போது தமிழக அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளியில் இரண்டு வயது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவர். சாதாரண நாட்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் காலை ஒன்பது மணி முதல் நான்கு மணி வரை செயல்படும்.
கொரோனா காலங்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு உத்தரவுப்படி இங்கு பயின்று வந்த குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…