ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா துவங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது.

சுவாமிகள், நாதஸ்வரக் குழுவினர் உள்ளிட்ட சிலருடன் கோயிலில் நடைபெற்ற சடங்குகள் மற்றும் பவனிக்குப் பிறகு, ரம்மியமாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமிகள் சித்திரக்குளத்தை வலம் வந்தனர்.

தெப்போற்சவ விழாவை காண்பதற்கு குளத்தின் வாயில் பகுதியிலும் மற்றும் படிக்கட்டுகளிலும் சிறிய அளவிலான மக்கள் கூட்டம் நின்றது.

Verified by ExactMetrics