ஷாப்பிங்

அபிராமபுரத்தில் உள்ள ராகாஸ் காபியில், காபி வகைகள் அதிகம்

அபிராமபுரம் 4வது தெருவில் கடந்த மாதம் ராகாஸ் காபி கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளரின் விருப்பப்படி வறுத்த விதைகள் புதிதாக அரைக்கப்பட்டு கொடுக்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட சிறிய இடமாகும்

இந்த கடையில் பல்வேறு அளவுகளில் அரைத்து கொடுக்க தயாராகவுள்ளது.

வெவ்வேறு தேநீர் தயாரிக்கும் பாணிகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்க முடியும். ராகாஸ் காபியானது பல்வேறு வகையான காபி மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு கலவைகளைக் கொண்டுள்ளது, அதுவே அதன் தனித்தன்மை ஆகும்.

கடையின் பெயரில் ஒரு இசையின் சின்னம் உள்ளது. மயிலாப்பூரைச் சேர்ந்த ராகஸின் சுரேஷ் ராமநாதன், “இசைக்கும் காபிக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது” என்கிறார்.

“காபி தூள் விற்பதை விட, காபியின் உண்மைகளை யார் வந்தாலும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிக்கரி குறைவு, பால் மற்றும் சர்க்கரை இல்லாத காபி உண்மையான சுவையைத் தருகிறது, அதுதான் நல்ல காபியின் ரகசியம்,” என்கிறார் சுரேஷ்.

இந்தியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும், அமெரிக்காவைச் சேர்ந்த பயணக் கப்பல்களிலும் 15 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், கடந்த ஆண்டுகளில் சேகரித்த காபி பற்றிய தகவல்களை ராகாஸின் சுவர்களில் நிரப்பியுள்ளார்.

ஸ்டராங் பில்டர் காபி பிரியர்களுக்கு, 80:20, 70:30 மற்றும் 60:40 போன்ற விகிதங்களின் தனிப்பயனாக்கப்பட்ட சிக்கரி கலவைகள் கிடைக்கின்றன.

ராகஸ் காபி, எண் : 28, அபிராமபுரம் 4வது தெரு, மயிலாப்பூர், சி பி ராமசாமி சாலை சந்திப்புக்கு அருகில் உள்ளது. போன்: 9840334813

செய்தி: வி.சௌந்தரராணி

admin

Recent Posts

விற்பனை: கைவினைப்பொருட்கள், விளக்குகள், பாரம்பரிய அலங்காரங்கள், தஞ்சை ஓவியங்கள்

ஸ்ருஷ்டி: தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் மற்றும் நல சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள கடையில் செப்டம்பர் 15…

2 days ago

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான போட்டி.தொடக்கம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான மயிலாப்பூர் டைம்ஸ் போட்டி தொடங்கியது. கிடைக்கக்கூடிய பொருட்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த குடையை வீட்டிலேயே உருவாக்கவும், இந்த…

2 days ago

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணனின் இல்லத்தில் அவரது சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவிகள்.

மயிலாப்பூரில் உள்ள குழந்தைகள் பூங்கா பள்ளி மாணவர்கள், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை காலை மறைந்த இந்திய குடியரசுத்…

2 days ago

பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர், ஆழ்வார்பேட்டை மண்டல மக்களின் வெள்ள பிரச்சனைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம்.

செப்டம்பர் 3 ஆம் தேதி, சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் ஐஏஎஸ் வீனஸ் காலனியில் நடைபெற்ற…

2 days ago

மந்தைவெளி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலின் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ணம், செப்டம்பர் 8ல்.

மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ண சடங்கு செப்டம்பர் 8ஆம் தேதி…

3 days ago

மந்தைவெளிப்பாக்கத்தில் காரைக்கால் அம்மையாரை மையமாக கொண்ட தமிழ் நாடகம். செப்டம்பர் 7

காரைக்கால் அம்மையார் கருப்பொருளில் தமிழ் நாடகம், தி கல்யாண நகர் சங்கம், எண்.29, டி.எம்.எஸ்.சாலை, மந்தைவெளிப்பாக்கம் என்ற இடத்தில் அரங்கேற்றப்படவுள்ளது.…

3 days ago