ஊரடங்கு விதிமுறைகளில் தெருவோர கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மயிலாப்பூரில் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருவோரம் இருக்கும் காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். பஜார் சாலையில் இன்று காலை எட்டு மணியளவில் சுமார் ஆயிரம் பேர் காய்கறிகளை வாங்க திரண்டு வந்திருந்தனர். அதே நேரத்தில் கடைகளும் (காய்கறி, மளிகை, இறைச்சி) நெருக்கமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் காய்கறிகளை வாங்க குறைந்தளவு நேரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு கூட்டமாக வந்து வாங்கி செல்கின்றனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சிலர் தினமும் கடைகள் திறந்துள்ளதால் காய்கறிகளை வாங்க வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும் போது மக்கள் யாரும் கொரோனா பற்றி கவலைப்படுவது போன்று தெரியவில்லை.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…