ஊரடங்கு விதிமுறைகளில் தெருவோர கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மயிலாப்பூரில் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருவோரம் இருக்கும் காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். பஜார் சாலையில் இன்று காலை எட்டு மணியளவில் சுமார் ஆயிரம் பேர் காய்கறிகளை வாங்க திரண்டு வந்திருந்தனர். அதே நேரத்தில் கடைகளும் (காய்கறி, மளிகை, இறைச்சி) நெருக்கமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் காய்கறிகளை வாங்க குறைந்தளவு நேரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு கூட்டமாக வந்து வாங்கி செல்கின்றனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சிலர் தினமும் கடைகள் திறந்துள்ளதால் காய்கறிகளை வாங்க வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும் போது மக்கள் யாரும் கொரோனா பற்றி கவலைப்படுவது போன்று தெரியவில்லை.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…