மயிலாப்பூர் வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care Centre) என்ற மருத்துவமனை நேற்று மாலை கோவிட் நோயாளிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது . இது நங்கநல்லூரிலுள்ள பி.எம் மருத்துவமனையின் ஒரு யூனிட் ஆகும். இந்த மருத்துவமனையில் இருபத்தைந்து படுக்கைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிகள் தங்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதற்கான அறிக்கையை மருத்துவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவரின் ஆய்வுக்கு பின்னரே நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் : 95144 95111.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…