ஊரடங்கு விதிமுறைகளில் தெருவோர கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மயிலாப்பூரில் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருவோரம் இருக்கும் காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். பஜார் சாலையில் இன்று காலை எட்டு மணியளவில் சுமார் ஆயிரம் பேர் காய்கறிகளை வாங்க திரண்டு வந்திருந்தனர். அதே நேரத்தில் கடைகளும் (காய்கறி, மளிகை, இறைச்சி) நெருக்கமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் காய்கறிகளை வாங்க குறைந்தளவு நேரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு கூட்டமாக வந்து வாங்கி செல்கின்றனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சிலர் தினமும் கடைகள் திறந்துள்ளதால் காய்கறிகளை வாங்க வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும் போது மக்கள் யாரும் கொரோனா பற்றி கவலைப்படுவது போன்று தெரியவில்லை.
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…