ஊரடங்கு விதிமுறைகளில் தெருவோர கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மயிலாப்பூரில் அந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருவோரம் இருக்கும் காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். பஜார் சாலையில் இன்று காலை எட்டு மணியளவில் சுமார் ஆயிரம் பேர் காய்கறிகளை வாங்க திரண்டு வந்திருந்தனர். அதே நேரத்தில் கடைகளும் (காய்கறி, மளிகை, இறைச்சி) நெருக்கமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் காய்கறிகளை வாங்க குறைந்தளவு நேரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு கூட்டமாக வந்து வாங்கி செல்கின்றனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சிலர் தினமும் கடைகள் திறந்துள்ளதால் காய்கறிகளை வாங்க வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும் போது மக்கள் யாரும் கொரோனா பற்றி கவலைப்படுவது போன்று தெரியவில்லை.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…