தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார் டாக்டர் சி.சைலேந்திர பாபு

டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர் கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி கலந்து கொண்டு புதிய இயக்குனராக பதவியேற்கவுள்ள சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவரிடம் அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜே.கே திரிபாதியின் மனைவியும் கலந்துகொண்டார். பதவியேற்பிற்கு பின் ஓய்வு பெற்ற தலைமை இயக்குனர் திரிபாதியையும் அவருடைய மனைவியையும் அலங்கரிக்கப்பட்ட காரில் அமரவைத்து காவல்துறை தலைமை அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். இது ஒரு வழக்கமான நிகழ்வு.

கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அலுவலகம். கடந்த இருபது வருடங்களுக்கு முன் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பழமையான மற்றும் பாரம்பரியமான கட்டிடங்களை இடிக்கக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததால் இந்த கட்டிடத்தை இடிக்காமல் அரசு தற்போதுவரை பயன்படுத்தி வருகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 weeks ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 weeks ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

4 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 month ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

1 month ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

1 month ago