டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர் கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி கலந்து கொண்டு புதிய இயக்குனராக பதவியேற்கவுள்ள சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவரிடம் அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜே.கே திரிபாதியின் மனைவியும் கலந்துகொண்டார். பதவியேற்பிற்கு பின் ஓய்வு பெற்ற தலைமை இயக்குனர் திரிபாதியையும் அவருடைய மனைவியையும் அலங்கரிக்கப்பட்ட காரில் அமரவைத்து காவல்துறை தலைமை அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். இது ஒரு வழக்கமான நிகழ்வு.
கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அலுவலகம். கடந்த இருபது வருடங்களுக்கு முன் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பழமையான மற்றும் பாரம்பரியமான கட்டிடங்களை இடிக்கக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததால் இந்த கட்டிடத்தை இடிக்காமல் அரசு தற்போதுவரை பயன்படுத்தி வருகிறது.
மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது. இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள்…
மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை அறிவித்துள்ளது. ஒன்று சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. மூன்று நாட்களில், வண்ணமயமாக்கல் போட்டிக்கான 35…
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…