டாக்டர் சி. சைலேந்திரபாபு தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக நேற்று ஜூன் 30 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா மயிலாப்பூர் கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி கலந்து கொண்டு புதிய இயக்குனராக பதவியேற்கவுள்ள சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவரிடம் அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜே.கே திரிபாதியின் மனைவியும் கலந்துகொண்டார். பதவியேற்பிற்கு பின் ஓய்வு பெற்ற தலைமை இயக்குனர் திரிபாதியையும் அவருடைய மனைவியையும் அலங்கரிக்கப்பட்ட காரில் அமரவைத்து காவல்துறை தலைமை அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். இது ஒரு வழக்கமான நிகழ்வு.
கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அலுவலகம். கடந்த இருபது வருடங்களுக்கு முன் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பழமையான மற்றும் பாரம்பரியமான கட்டிடங்களை இடிக்கக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததால் இந்த கட்டிடத்தை இடிக்காமல் அரசு தற்போதுவரை பயன்படுத்தி வருகிறது.
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…