ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவின் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வு.

மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு தலைவராக பதவியேற்கவுள்ளார். இவருக்கு வயது 55. போப் ஆண்டவர் இவரை சமீபத்தில் அந்தமான் தீவின் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவராக தேர்ந்தெடுத்தார். பதவியேற்பு விழா ஆகஸ்ட் 21ம் தேதி அந்தமான் தீவின் தலைநகர் போர்ட்பிளேயரில் நடக்க உள்ளது. பாதிரியார் விசுவாசம் செல்வராஜ் அவர்கள் ஆந்திர மகிள சபாவின் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் பிறந்தார். பாதிரியாரின் குடும்பம் கிரீன் வேஸ் சாலையில் வசித்து வந்தனர். இவரது குடும்பத்தினர் அவல் வியாபாரம் செய்யும் தொழிலை செய்து வந்தனர். தற்போதுகூட பாதிரியாரின் சகோதரர் பாஸ்கர் மந்தைவெளியில் தேவநாதன் தெருவில் அவல் மற்றும் அதனுடன் சேர்ந்து வேரு சில பொருட்களையும் மொத்தவியாபாரம் செய்து வருகிறார்.

பாதிரியார் செல்வராஜ் தனது பள்ளிப்படிப்பை ராஜா முத்தையா பள்ளியிலும் பின்னர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியிலும் பின்னர் பாதிரியார் படிப்பில் சேர்ந்து படித்ததாக தெரிவிக்கிறார். மேலும் பாதிரியார் படிப்பை முடிக்கும்போது அந்தமான் பகுதிக்கு பாதிரியார் தேவை இருப்பதாகவும் தெரிவித்தனர் அப்போது அவர் அந்தமானுக்கு சென்று சேவை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அன்று முதல் பாதிரியார் செல்வராஜ் பல்வேறு பதவிகளில் இருந்துவந்துள்ளார். பிஷப் குழுவிலும் பணியாற்றி வந்துள்ளார். ஆகவே தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

1 week ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago