மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து சிறிய அளவிலான நிகழ்ச்சி நடத்தி விழாவை கொண்டாடினர். அதே போன்று ஆர்.ஆர் சபா ஊழியர்கள் சபா வாயிலில் கொடியேற்றினர். லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் காதுகேளாதோருக்கான அசோசியேசன் சார்பாக சுமார் முப்பது மாணவர்கள் சேர்ந்து கொடியேற்றப்பட்டது. செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவிகளும் மற்றும் சில நர்ஸ்களும் சேர்ந்து கொடியேற்றினர் இங்கு சிறிய அளவிலான நிகழ்ச்சியும் நடந்தது. இது போன்று ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…