மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து சிறிய அளவிலான நிகழ்ச்சி நடத்தி விழாவை கொண்டாடினர். அதே போன்று ஆர்.ஆர் சபா ஊழியர்கள் சபா வாயிலில் கொடியேற்றினர். லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் காதுகேளாதோருக்கான அசோசியேசன் சார்பாக சுமார் முப்பது மாணவர்கள் சேர்ந்து கொடியேற்றப்பட்டது. செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவிகளும் மற்றும் சில நர்ஸ்களும் சேர்ந்து கொடியேற்றினர் இங்கு சிறிய அளவிலான நிகழ்ச்சியும் நடந்தது. இது போன்று ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…