மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது இரண்டு இடங்களில் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கொடியேற்றினர்.
நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள ரமா ராவ் காலனியில் வசிக்கும் மக்கள் கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் பகுதியில் தெரு தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்களை அழைத்து கொடியேற்றி வருகின்றனர். இந்த வருடமும் அதே போன்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களையும் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு வேலைகளை செய்துவரும் செக்யூரிட்டிகளையும் அழைத்து கொடியேற்றினர். மேலும் இதே போன்று கல்லுக்காரன் தெருவிலும் இரண்டு உர்பேசர் ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து கொடியேற்றவைத்தனர். இது போன்று தங்களை யாரும் அழைத்து இதுவரை கொடியேற்றவில்லை, இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் உர்பேசர் ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…